கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-09 12:08 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா ஜெயின் பள்ளி அருகில் பாரதி ரோடும், மருத்துவர் தெருவும் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்