கழிவுநீர் கால்வாயை பராமரிக்க வேண்டும்

Update: 2022-09-25 09:44 GMT

வந்தவாசி தாலுகா பொன்னூர் மூதா கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் வீடுகளில் இருந்து வேளியேற்றும் கழிவுநீர் கால்வாயில் செல்ல வழியில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயை ஊராட்சி நிர்வாகம் தூர்வாரி, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வக்கீல் எஸ்.சக்திவேல், பொன்னூர்.

மேலும் செய்திகள்