கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-08-12 10:47 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பல நாட்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சம்பந்தப்பட்டவர்கள் தூர்வார வேண்டும்.

ஜெயசீலன், மூஞ்சூர்பட்டு 

மேலும் செய்திகள்