கால்வாய் அடைப்பு சரிசெய்யப்படுமா?

Update: 2023-02-05 17:35 GMT

வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே காவல் குடியிருப்பு எதிரே உள்ள சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், வேலூர்.

மேலும் செய்திகள்