சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2026-05-17 13:17 GMT

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அயன்ரெட்டியபட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட இளங்காகுறிச்சி வடக்குத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்