திறந்த நிலையில் இருக்கும் கால்வாய்

Update: 2022-09-20 10:10 GMT



திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் கழிவு நீர் கால்வாயில் ஒரு இடத்தில் அதன் மூடி திறக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கால்வாயில் தவறிவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு திறந்த நிலையில் இருக்கும் கால்வாயை மூட வேண்டும்.


மேலும் செய்திகள்