கழிவுநீர் செல்ல வாட்டமே இல்லாமல் கட்டப்படும் புதிய கால்வாய்

Update: 2022-08-12 12:22 GMT

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் நேதாஜி சாலையில் புதிதாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தக் கால்வாய் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வாட்டமே இல்லாத வகையில் கட்டப்பட்டு வருகிறது. அதாவது குறுக்கு தெரு கால்வாயை விட மெயின் ரோடு கால்வாய் உயரமாக உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் மழை நீர், கழிவுநீர் செல்லும் குழாய் இணைப்புக்கு இணையாகக் கட்டப்படுகிறது. இதனால் மழைநீர், கழிவுநீர் குடியிருப்பு இடங்களுக்கும் வீட்டுக்குள்ளும் வரும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கால்வாய் கட்டப்பட வேண்டும்.

கண்ணன், சேண்பாக்கம்.

மேலும் செய்திகள்