கழிவுநீர் கால்வாய் மேலே கட்டப்பட்ட கட்டிடம்

Update: 2023-01-04 17:11 GMT

திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் புதுப்பேட்டை செல்லும் வழியில் ரெயில்வே பாலம் உள்ளது. அதன் கீழே இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை செல்கிறது. இதன் வழியாக ஆசிரியர் நகர் பகுதிக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் இருபுறங்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மேல் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார். இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் நடந்து கூட செல்லமுடியாத அளவுக்கு அந்தக் கட்டிடம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் மேலே ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் முன்வர ேவண்டும்.

-சுரேஷ், பாச்சல்.

மேலும் செய்திகள்