குளத்தில் கழிவுநீர் கலப்பு

Update: 2023-01-08 16:24 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம் வடக்கிப்பட்டியில் துலுக்கன் குளம் உள்ளது. இக்குளத்து நீர் மூலம் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இக்குளம் சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் தற்போது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அக்குளத்தில் உள்ள பல வகையான மீன்கள் இறந்து விட்டன. இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்