மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே உள்ள மேட்டு தெருவில் ஆஸ்பத்திரி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த தெரு சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை நீருடன், மழைநீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.