கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

Update: 2022-10-12 07:51 GMT

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவபுரத்தில் இருந்து வாகவிளைக்கு செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையில் சாமிநாதபுரம் தெருவில் உள்ள வீடுகளின் கழிவுநீர்கள் குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதால் நடுச்சாலையில் கழிவுநீர்கள் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. மேலும், அந்த பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராமதாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்