கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-21 13:39 GMT

நாகையில் பாரதி மார்க்கெட்டையொட்டி வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்கால் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் இந்த வாய்க்காலில் செல்வதால் கழிவுநீர் வாய்காலாக மாறியுள்ளது. மேலும் ஒரு சிலர் குப்பைகளை கொட்டியும் வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும்துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்