கழிவறை பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதி

Update: 2022-09-21 12:38 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். பஸ்நிலையத்தில் கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறை கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள், சிறுமிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


- சாகுல் ஹமீது, திட்டச்சேரி.

மேலும் செய்திகள்