செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி சத்தியமூர்த்தி நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் தேக்கம் அதிகம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும். கழிவுநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும்.