தேனி மாவட்டம் ஆங்கூர் பாளையம் ஊராட்சி சாமாண்டிபுரத்தில் சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக இருப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.