கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2022-08-19 11:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குள தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாமல் உள்ளதால் குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்