நங்காஞ்சி ஆற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-18 13:48 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் தற்போது அதிக அளவில் கோரைப் புற்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் ஆற்றில் விடப்பட்ட சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அருகிலேயே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளதால் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்