நெல்லை கொக்கிரகுளம், குறிச்சி, குலவணிகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்பு உள்ள வாறுகால்களில் மாதக்கணக்கில் தான் சாக்கடை கழிவுகள் அள்ளப்படுகிறது. அவ்வாறு அள்ளி தெருவில் குவித்து வைக்கப்படும் கழிவுகளும் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. இதனால் அந்த சாக்கடை கழிவுகள் வெயிலில் காய்ந்து மீண்டும் ஓடையிலே விழக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே, தெருவில் அள்ளி வைக்கப்படும் சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.