சுகாதார சீர்கேடு
திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் ஆங்காங்கே பலர் கழிவுகளை கலந்துவிடுகிறார்கள். சிலர் குப்பைகளை கொட்டி வருவதும், சில இடங்களில் இரவு நேரத்தில் சாயக்கழிவுகளை திறந்துவிடுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் சக்தி தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள நொய்யல் ஆற்றங்கரையில் செப்டிக் டேங்க் கழிவுகள் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே கலக்கப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சுரேஷ், திருப்பூர், 97870 81868