நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-12 12:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி குடியிருப்பு பகுதியில் ஆட்டு இறைச்சி கடை வைக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் வெட்டப்படும் ஆட்டின் ரத்தம் அருகே பள்ளம் தோண்டி அதில் விடப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்