அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, த.சோழன்குறிச்சி ஊராட்சி நடுத்தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடை அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.