மானூர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு வாகைகுளம் கிராமம் நாடார் மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால், இங்கு சாக்கடை நீர் செல்ல வழி இல்லாததால் தெருவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் தெருவில் மக்கள் நடந்துக்கூட செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.