வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-08-02 12:21 GMT
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சானூரப்பட்டி பகுதி மாதாகோவில் தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் வடிகாலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் வடிவதற்கு வழியின்றி வடிகாலில் தேங்கி சாக்கடையாக மாறிவருகிறது. மேலும், வடிகால் முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், வடிகாலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்