சென்னை புதிய வண்ணாரப்பேட்டை, ஏ.ஈ. கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. தினமும் தேங்கும் கழிவுநீரால் இந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு தான் பயணம் செய்கிறார்கள். எனவே சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.