பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சி சிவாஜி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் போதிய அளவில் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைபெய்யும்போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.