சென்னை தண்டையார்ப்பேட்டை ரெயில் நிலையம் அருகில், பெரும்பாலான பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையோரத்தில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் சிறுநீர் கழிக்கின்றனர். இப்பகுதியை கடந்து செல்லும் போது மூக்கைப்பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும் அருகிலேயே துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதால் சாலையிலேயே கழிவுநீர் தேங்குகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.