தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2022-07-28 10:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட அம்சா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நந்திவரம் பெரிய ஏரியின் கலங்கல்-கால்வாயில் கலக்கின்றன. ஏற்கனவே இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி, நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால், கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளில், கிணற்று நீரை எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசு உடனடியாக இந்த கால்வாயை தூர்வாரி, மூடிய பாதுகாப்பான சிமெண்ட் கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்