சென்னை சூளைமேடு லோகநாதன் நகர் முதல் தெருவில் உள்ள மழை நீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்துள்ளது. மேலும் இந்த சாலையை இரவில் கடந்து செல்லும் மக்கள் இந்த வடிகால்வாயை கடக்கும் போது சரியாக மூடப்படாத மூடியால் தடுக்கி கீழே விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயின் மூடியை குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் சரி செய்து தர வேண்டும்.