சென்னை பாரிமுனை லிங்கி செட்டி தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகின்றது. இந்தநிலை கடந்த ஒரு வாரமாக தொடருகின்றது. கழிவுநீர் வெளியாகி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.