சாக்கடை கால்வாய் கட்டித்தரப்படுமா?

Update: 2023-09-20 12:05 GMT
திருச்சி மாநகராட்சி 30-வது வார்டு மதுரை ரோடு ஜெயில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்