நிறைவு பெறாத வாய்க்கால் பணி

Update: 2023-09-10 11:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி சுடுகாடு சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது நடைபெற்றது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி பாதியில் நிற்பதினால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்