கால்வாயில் குவிந்த கழிவுகள்

Update: 2023-09-06 12:34 GMT
சேலம் தாதுபாய் குட்டை களரம்பட்டி மெயின் ரோடு அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்தநிலையில் அந்த சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்கிய உள்ள நிலையில் அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல விரைவில் நடவடிக்கை எடுப்பார்கா?

மேலும் செய்திகள்