கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2023-09-03 11:53 GMT

பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் ஊராட்சி உள்ள பிரதான சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஓடுகின்றன. மேலும் மழை பெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழி இன்றி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்