சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-27 12:04 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி 3-வது வார்டு செல்லபட்டி பகுதியில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்