கடலூர் புதுக்குப்பம் பகவந்தா் நகரில் முறையான கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் அப்பகுதி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தி தர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.