சுகாதார சீர்கேடு

Update: 2023-08-16 07:31 GMT

களியக்காவிளை சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் சாலையோரத்தில் ஓடையின் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதாரிகள் நலன்கருதி ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைத்து கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

மேலும் செய்திகள்