சேதமடைந்த மூடி

Update: 2023-08-13 13:15 GMT

பெரம்பலூர் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தர் நகர் பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில், ஆங்காங்கே சாலையின் நடுவே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்