நிறுத்தப்பட்ட வடிகால் பணி

Update: 2023-08-09 11:49 GMT

கரூர் ஜவகர் பஜார், கருப்பாயி கோவில் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் மிகவும் தூர்ந்துபோன நிலையில் புதிதாக வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே இருந்த வடிகாலை தோண்டி புதிய வடிகால் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பணியானது ஆரம்பிக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் தோண்டப்பட்ட அந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்