கடும் துர்நாற்றம்

Update: 2023-08-09 10:17 GMT

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பகுதியில் புதிதாக கட்டி உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவுநீர் சேகரிக்க தொட்டி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே தொற்று நோய் பரவாமல் தடுக்க அங்கு கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்