சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-08-06 17:49 GMT
விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சட்டக்கல்லூரி எதிரே உள்ள சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்