கழிவுநீர் கால்வாயை தூர்வாருவது அவசியம்

Update: 2023-08-06 17:46 GMT
திருக்கோவிலூர் தாலுகா ஜி.அரியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்