கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-08-06 13:30 GMT

கோவை மாநகராட்சி 68-வது வார்டு டாடாபாத் 7-வது வீதியில் உள்ள ஆறு முக்கு சாலையில் கழிவுநீர் கால்வாய் இருக்கிறது. இந்த கால்வாய் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்