கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-06 13:26 GMT

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, சாலையோரத்தில் குவியலாக வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையின் நடுவில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்