சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-06 10:03 GMT

திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் சாலையின் நடுவே குளம் போல் தேங்கி நிற்கிறது. பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் சாலையில் நடுவே தேங்கியுள்ள கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் தேக்கம் அடையாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

------------------------

மேலும் செய்திகள்