திறந்து கிடக்கும் கால்வாயால் அச்சம்

Update: 2023-08-02 17:25 GMT
விழுப்புரம் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள தேர் பிள்ளையார் கோவில் அருகில் கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் யாரேனும் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கால்வாய் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூடுவதோடு, தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்