சுகாதார சீர்கேடு

Update: 2023-07-30 08:50 GMT

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது கால்வாய் வழியாக சென்று வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு அருகிலும், நடைபாதையிலும் வழிந்தோடி செல்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து, நீட்டிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்