பொதுமக்கள் அவதி

Update: 2023-07-30 08:02 GMT

திங்கள்சந்தை வாரச்சந்தை நுழைவு வாயில் அருகில் உள்ள பாதாள கழிவுநீர் ஓடையானது சில காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், கழிவு நீரானது சாலையில் பாய்வதால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அந்த வழியாக சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதாள கழிவுநீர் ஓடையை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடக்க வேண்டும்.

-அஜித், திங்கள்சந்தை.

மேலும் செய்திகள்