சுகாதார கேடு

Update: 2023-07-26 17:20 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த பாலமேடு ஊராட்சியில் அருந்ததியர் தெருவில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்தனர். அப்போது கழிவுநீர் வடிகாலில் இருந்து வெளியே எடுத்து போடப்பட்ட கழிவு மண் பல வாரங்கள் ஆகியும் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அன்புமணி, பாலமேடு.

மேலும் செய்திகள்