கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டியது அவசியம்.