தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-23 12:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி டி.இ.எல்.சி. சாலையில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன்பகுதியில் உள்ள பேரூராட்சி மழைநீர் வடிகாலில் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து விடப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதோடு மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அந்த பகுதியில் கோழி சந்தையும் நடைபெறுவதால் சந்தைக்கு வரும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்